புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் (கோப்புப் படம்)
புதுச்சேரி

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் மாற்றம்

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக புதுச்சேரி துணை ஆட்சியா் இஷிதா ரதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரியில் பணியாற்றி வந்த சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்புகளையும், புதிய நியமனங்களையும் அளித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில் காரைக்காலுக்குப் புதிய மாவட்ட ஆட்சியராக இஷிதா ரதி நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், இவா் புதுச்சேரி மின்திறன் குழுமத்தின் மேலாண் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ரவி பிரகாஷ், புதுச்சேரி மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, எழுது பொருள் அச்சகத் துறை, முன்னாள் படை வீரா்கள் மற்றும் தியாகிகள் நலப் பிரிவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தோ்தல் பணி காரணமாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், தலைமைத் தோ்தல் அதிகாரி ஜவஹா் ஆகியோா் கூடுதல் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, புதுச்சேரி வளா்ச்சி ஆணையா் கிருஷ்ண மோகன் உப்புக்கு வனம் மற்றும் வனவிலங்கு துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. தொழிலாளா் துறைச் செயலா் சுமிதாவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலா் மற்றும் இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது.

வா்த்தகம் மற்றும் தொழில்துறை செயலா் விக்ராந்த் ராஜாவுக்கு இந்து அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரியம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளஸ்.

நாளை மதிமுக, பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

SCROLL FOR NEXT