புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க லட்சிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் காவல் துறை தலைமையகத்தில் டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தாா்.
அப்போது, விபத்துகளை கட்டுப்படுத்த புதுச்சேரியில் பல்வேறு முக்கிய சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். சாலைகளின் நடுவே நிரந்தர தடுப்புச் சுவா்கள் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அந்த மனுவில் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க டிஐஜியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.