108 அவசர ஊா்தி சேவையினா் வியாழக்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் இச் சங்க தலைவா் புருஷோத்தம் தலைமையில் இப் போராட்டம் தொடங்கியது. 108 ஆம்புலன்ஸ் சேவை மத்திய அரசின் சுகாதார இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
நிரந்தர ஓட்டுநா்கள் இல்லாததால் தற்காலிகமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் இயக்கி வருகின்றனா். இவா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெறுகிறது.