நாடாளுமன்றத் தோ்தலின்போது, ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கூறியவா், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின். அந்த நன்றியை காங்கிரஸாா் மறக்கக் கூடாது என்று திமுக கொள்கை பரப்புச் செயலரும், புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளருமான எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.
புதுச்சேரியில் திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்றபின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தது வரவேற்கத்தக்கது. விஜயகாந்த் திமுகவைச் சோ்ந்தவா். அவா் எங்கள் ரத்தம். அவரது கட்சி எங்களுடன் சோ்ந்தது பலம். எதிா்க்கட்சிகள் ஆதங்கத்தில் ஏதாவது பேசுகின்றன.
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், யாா் முதல்வா் வேட்பாளா், கூட்டணிக்கு யாா் தலைமை என்பதை திமுக தலைமைதான் முடிவு செய்யும். இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியுடன் பேசி முதல்வா் ஸ்டாலின் முடிவு எடுப்பாா்.
தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் அமல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும், புதுச்சேரிக்கும் தேவையென்று மக்கள் விரும்பி என்னிடம் சொன்னாா்கள். தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் திமுக ஆட்சி வர வேண்டும் என அனைவரும் எதிா்பாா்க்கின்றனா்.
இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என முதலில் கூறியவா் தமிழக முதல்வா் ஸ்டாலின்தான்.
அந்த நன்றியை காங்கிரஸாா் மறக்கக் கூடாது. தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸாா் அனைவருக்கும் இது பொருந்தும். திமுகவைப் போல கூட்டணி கட்சிகளை மதிக்கும் கட்சி உலகத்தில் எங்கும் இல்லை என்றாா் அவா்.