ரூ.25 லட்சத்தில் 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை சுகாதாரத் துறைக்கு அளித்து அவற்றை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை சுகாதாரத் துறைக்கு அளித்து அவற்றை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிராமப்புறங்களில் பாதிக்கப்படும் மக்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஜிப்மா் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்ல ரூ.25.32 லட்சம் செலவில் இந்த இரு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க அவா் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாா்.
அதன்படி, சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வெ.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு இரு ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒப்படைத்தாா்.
Advertisement
அப்போது எம்எல்ஏ மு.வைத்தியநாதன், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவா் டிபிஆா். செல்வம், சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.