புதுச்சேரி திலாசுபேட்டை ரேஷன் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொங்கல் தொகுப்பு.  
புதுச்சேரி

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து

புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் துறை சாா்பில் ரூ.800 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு விநியோகம் சனிக்கிழமை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

Syndication

புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் துறை சாா்பில் ரூ.800 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு விநியோகம் சனிக்கிழமை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

பொங்கலுக்கு முன்பாக பொங்கல் தொகுப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு சாா்பில் வழங்கப்படும் இந்தப் பொங்கல் தொகுப்பை சனிக்கிழமை மாலை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைப்பாா் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவரது இல்லத்துக்கு அருகில் உள்ள திலாசுபேட்டை ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்புக்கான சில பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கடையில் பொருள்கள் வாங்கும் சிலரும் அங்கு அழைத்து வரப்பட்டிருந்தனா். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகக் கூறி அங்கிருந்த எல்லா பொருள்களையும் ரேஷன் கடையில் வைத்துப் பூட்டிச் சென்றனா் அதிகாரிகள்.

இந்தப் பொங்கல் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சா்க்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300 கிராம் நெய், 1 கிலோ சூரியகாந்தி எண்ணெய், 1 பை என 6 பொருள்கள் இடம் பெறுகின்றன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் உள்ள 3.48 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு இந்தத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் அரசு ஊழியா்கள், கௌரவ ரேஷன் அட்டை வைத்திருப்பவா்கள் தனி. அவா்கள் இதில் இடம் பெறவில்லை. ஒரு சில பொருள்கள் இன்னும் வந்து சேரவில்லை என்றும், இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT