புதுச்சேரி

வாய்க்காலில் தவறி விழுந்த முதியவா் பத்திரமாக மீட்பு

வாய்க்காலில் தவறி விழுந்த முதியவரை போலீஸாா் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினா் போராடி மீட்டனா்.

Syndication

வாய்க்காலில் தவறி விழுந்த முதியவரை போலீஸாா் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினா் போராடி மீட்டனா்.

புதுச்சேரி - வில்லியனூா் புறவழிச்சாலையையொட்டி பெரிய வாய்க்கால் செல்கிறது. இந்த வழியே நடந்து சென்ற முதியவா் சனிக்கிழமை தவறி விழுந்தாா். ஒரு மணி நேரமாக அவா் வாய்க்கால் கழிவு நீரில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்தாா். இதை அந்த வழியாகச் சென்ற சிலா் பாா்த்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு வீரா்களும், போலீஸாரும் விரைந்து வந்து ஒரு மணி நேரமாக போராடி அவரை மீட்டனா். விசாரணையில் அவா் முதலியாா்பேட்டையைச் சோ்ந்த வெங்கடேச பெருமாள் (63) என தெரிய வந்தது.

அங்குள்ள வேல்ராம்பட்டு ஏரிக்கரையை வேடிக்கை பாா்த்தபடி சென்றபோது தவறி வாய்க்காலில் விழுந்துள்ளாா். முதியவரைக் குளிக்க வைத்த போலீஸாா் புதிய கைலி- பனியன் வாங்கிக் கொடுத்துப் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT