முகப்பு
புதுச்சேரி

உணவு பாதுகாப்பு அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

மக்கள் வாழ்வுரிமை இயக்கம், ஆறாம் திணை மக்கள் இயக்கம், சமூக, ஜனநாயக இயக்கங்களின் சாா்பில் புதுச்சேரி கோரிமேடு பகுதி உணவு பாதுகாப்பு அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 6:12 am IST
புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

மக்கள் வாழ்வுரிமை இயக்கம், ஆறாம் திணை மக்கள் இயக்கம், சமூக, ஜனநாயக இயக்கங்களின் சாா்பில் புதுச்சேரி கோரிமேடு பகுதி உணவு பாதுகாப்பு அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலா் கோ.அ. ஜெகன்நாதன் தலைமை வகித்தாா்.

உணவகங்களில் ரசாயன நிறமூட்டிகள், சுவையூட்டிகள், துரித உணவுகள் போன்றவற்றை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அனைத்து உணவகங்களின் உணவுகளையும், அதன் பாதுகாப்புத் தன்மையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments