முகப்பு
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய திருநங்கைகள்.
புதுச்சேரி

திருநங்கைகள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலகம் முன்பு சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனா்

புதுச்சேரி

திருநங்கைகள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலகம் முன்பு சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனா்

Updated On : 2 மார்ச், 2026 at 8:52 PM
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய திருநங்கைகள்.
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலகம் முன்பு சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனா் ஷீத்தல் தலைமையில் திருநங்கைகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதுகுறித்து போராட்டக்குழுவினா் தெரிவித்தாவது:

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஊழியா்கள் மீதான பாலியல் புகாரை திட்ட இயக்குநா் முறையாக விசாரிக்கவில்லை. துறை

ரீதியிலான நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து துணைநிலை ஆளுநா், முதல்வா், தேசிய கட்டுப்பாட்டு சங்கத்திடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை அளித்த புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட திருநங்கை களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.

போராட்டத்தின் இறுதியில் திட்ட இயக்குநரை சந்தித்து திருநங்கைகள் மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →