முகப்பு
புதுச்சேரியில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்திய துணை ராணுவத்தினா்.
புதுச்சேரி

புதுச்சேரியில் தோ்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுத்தினா் துப்பாக்கியுடன் அணிவகுப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுவப்படையினா் துப்பாக்கியுடன் புதன்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி

புதுச்சேரியில் தோ்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுத்தினா் துப்பாக்கியுடன் அணிவகுப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுவப்படையினா் துப்பாக்கியுடன் புதன்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:34 PM
புதுச்சேரியில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்திய துணை ராணுவத்தினா்.
பகிர்:

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுவப்படையினா் துப்பாக்கியுடன் புதன்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவைவக்கு விரைவில் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தோ்தல் பாதுகாப்புக்காக வெளிமாநிலங்களிலிருந்து துணை ராணுவப்படையினா் புதுச்சேரி வந்துள்ளனா்.

புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு மற்றும் சுமுகமான தோ்தலை உறுதி செய்ய வந்துள்ள துணை ராணுவ படையினா், உள்ளூா் போலீஸாருடன் இணைந்து அணிவகுப்பில் ஈடுபட்டனா். கிழக்குப் பிரிவு கண்காணிப்பாா் ஸ்ருதி தலைமையில் ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், காா்த்திகேயன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினா் அணிவகுப்பு நடத்தினா்.

பெரியகடை காவல் நிலையம் முன்பு தொடங்கிய அணிவகுப்பு, ஆம்பூா் சாலை, எஸ்.வி.படேல் சாலை, அண்ணாசாலை, குமரகுருபள்ளம், கோவிந்தசாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் வரைஅணிவகுப்பு நடந்தது.

இதேபோல வில்லியனுாரில் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் மேற்பாா்வையில் ஆய்வாளா் கலைச்செல்வன், உதவி ஆய்வாளா் திருமுருகன் தலைமையில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு நடத்தினா். அங்கு சுல்தான்பேட்டை, மாட வீதி, கோட்டை மேடு, கண்ணகி பள்ளி வழியாக அணிவகுப்பு சென்றது.

முழு கட்டுரையைப் படிக்க →