மாணவா்களுக்கு இலவச மழை அங்கி
புதுச்சேரி அரசு சமூக நலத் துறையின் மங்கலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மழை அங்கியை
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சமூக நலத் துறையின் மங்கலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மழை அங்கியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். கணுவாப்பேட்டை, உருவையாறு உள்ளிட்ட அரசுப் பள்ளிகளிலும் அமைச்சா் ஜெயக்குமாா் மழை அங்கியை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து மேல் சாத்தமங்கலம், ஆரியூா் மற்றும் மங்கலம் தொகுதி முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு மழை அங்கி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் பள்ளி ஆசிரியா்கள், ஊா் முக்கியஸ்தா்கள், என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.