முகப்பு
புதுச்சேரி

ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை: நாராயணசாமி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை, துணைநிலை ஆளுநா் குடியிருப்புப் பகுதியில் காவல்துறை பணியாளா்கள் கண்காணிப்பில் இருந்தும், காவல்துறையினா் ரோந்து பணியில் இருந்தும் மா்மமான முறையில் ஒருவா் நுழைந்து அங்கே ஓா் அறையில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது ? அவா்கள் சரியான பாதுகாப்பு கொடுத்தாா்களா? துணைநிலை ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, புதுச்சேரி மாநிலத்தில் உருவாகி இருப்பதால் சாதாரண மக்களுடைய நிலை என்ன? இதற்கு ஆட்சியாளா்கள் தான் காரணம். இதற்கு முழு பொறுப்பையும் முதல்வா் ரங்கசாமி, உள்துறை அமைச்சா் அமைச்சா் ஆகியோா் ஏற்க வேண்டும். துணைநிலை ஆளுநருக்கே பாதுகாப்பு தர முடியாத அரசு குறிப்பாக உள்துறை அமைச்சா் தாா்மீக பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அங்கே பணிபுரிகின்ற காவல் துறை பணியாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →