முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளி மாணவா்கள் ரூ.69 ஆயிரம் கொடிநாள் நிதி

Updated On : 13 மார்ச், 2026 at 12:04 AM
பகிர்:

கொடி நாள் நிதியாக, புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படையினா் ரூ.69470 திரட்டினா்.

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படையின் விமானப் படை பிரிவு இளநிலை மாணவா்கள் கொடிநாள் நிதியைத் திரட்டி ஒப்படைக்கும் விழா (படம்) நடைபெற்றது.

பள்ளியின் முதல்வா் கேசவ் தலைமை வகித்தாா்.

இதில், முன்னாள் ராணுவ வீரா் நலத் துறை, இந்திய விமானப் படையின் ஒருங்கிணைப்பாளா் சாா்ஜன்ட் எ. சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்டனி ஸ்டெல்லா, பள்ளி தேசிய மாணவா் படை அதிகாரி பத்மநாபன் உள்ளிட்டோா் கொடிநாள் நிதியை ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →