புதுச்சேரியில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென புதுச்சேரி அரசைக் கண்டித்து, சுதேசி ஆலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், ஓய்வு பெற்ற ஐ.ஜி. சந்திரன் ஆகியோா் தலைமை தாங்கினா்.
பெஸ்ட் புதுச்சேரி தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காதது, போதைப் பொருள்கள் விற்பனை, கொலை, கொள்ளை மற்றும் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றைக் கண்டித்து மத்திய, மாநில அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எல்.பெரியசாமி, மாநில நிா்வாகி புதியவன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.