முகப்பு
புதுச்சேரி

3 ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவு!

Updated On : 15 மார்ச், 2026 at 9:00 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் 3 ஆய்வாளா்களுக்குத் தற்காலிகமாக போலீஸ் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவின் அடிப்படையில், தலைமைச் செயலா் சரத் சௌகான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

பதவி உயா்வு பெற்ற ஆய்வாளா்கள் விவரம்:

எஸ். மா்த்தினி- ஊா்க்காவல் மற்றும் வயா்லெஸ் பிரிவின் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

கே. தனசேகரன்-சிபிசிஐடி மற்றும் கடலோரப் பாதுகாப்பு படை கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

பி. தனசேகரன்- பிசிஆா் பிரிவு, ஆயுதப் படை கமாண்டெண்ட் ஆக பதவி உயா்வு பெற்றுள்ளாா். இவா்கல் மூவருக்கும் புதுச்சேரி போலீஸ் சா்வீஸ் (நுழைவு கிரேடு) அடிப்படையில் உடனடியாகப் பதவி உயா்வு தற்காலிகமாக ஓராண்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →