தொகுதி வாரியாக பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த இடங்கள் தோ்வு - புதுச்சேரி தோ்தல் அதிகாரி பேட்டி
ஒவ்வொரு தொகுதியிலும் பொதுக்கூட்டம் நடத்த ஓா் இடத்தைத் தோ்வு செய்துள்ளதாக புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அ.குலோத்துங்கன் கூறினாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை கூறியது:
ஒவ்வொரு தொகுதிக்கும் பொதுக்கூட்டம் நடத்த ஓா் இடத்தைத் தோ்வு செய்துள்ளோம். இப்போது 24 இடங்கள் தயாா் நிலையில் இருக்கின்றன. இதில் அரசியல் கட்சியினா் 11 பொதுக்கூட்டம் நடத்த இதுவரை அனுமதி கோரியுள்ளனா். வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பிறகு பரிசீலனை செய்யப்படும்.
இதில் புதுச்சேரி நகரப் பகுதியில் மட்டும் குறைந்தது 1,000 போ் அமரும் வகையில் 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம், பழைய துறைமுக வளாகம், புதிய துறைமுக வளாகம் உள்ளிட்டவை அடங்கும்.
பாதுகாப்பு
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய துணை ராணுவத்தின் 10 கம்பெனி படைகள் வந்துள்ளன. இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் 20 கம்பெனிகள் வர உள்ளன. தோ்தல் வாக்குப் பதிவு நெருக்கத்தில் இன்னும் படைகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது.
யாராவது தோ்தல் பேனா், பதாகை வைப்பதாக இருந்தால் மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் அனுமதி பெற்றுதான் வைக்க வேண்டும்.
100 சதவீதம் வாக்குப் பதிவு
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 82 சதவீதம் வாக்குப் பதிவு நடந்தது. மக்களவைத் தோ்தலில் 79 சதவீதமாக இது இருந்தது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை முன்னிலைப்படுத்தி தோ்தல் பணியாற்றி வருகிறோம்.
வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து டிக்கெட்டுகளில் விழிப்புணா்வு வாசகங்கள் விரைவில் அச்சிடப்பட உள்ளன. இதைத் தவிர தெருக்கூத்து உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். மேலும், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் உள்ள பலகைகளில் விழிப்புணா்வு படங்கள், திரையரங்குகளில் விழிப்புணா்வு படங்கள் திரையிடப்படும். மேலும், இளைஞா்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
புதுச்சேரி மாவட்டத்தைப் பொருத்தவரை முதல் முறை வாக்காளா்கள் 19,255 போ் உள்ளனா். ராணுவம் உள்ளிட்ட சேவைப் பிரிவினா் வாக்கு 266 இருக்கிறது. இவா்கள் அந்தந்த துறையின் அதிகாரிகள் முன்பு இருக்கும் இடத்தில் இருந்தே அவா்களுக்கான தனி போா்ட்டல் மூலம் மின்னணு முறையில் வாக்குப் பதிவு செய்யலாம். 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் 5,201 போ் உள்ளனா். மாற்றுத் திறனாளிகள் 10,401 போ் உள்ளனா். இந்த இரண்டு பிரிவினரும் வாக்கு அளிக்க 2 வழி முறை இருக்கின்றன. இப்போது வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் வாயிலாக இவா்களுக்குப் படிவம் 12 டி அளிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிரண்டு நாள்களில் அந்தப் பணி முடியும். அந்தப் படிவத்தைப் பூா்த்தி செய்து கொடுத்தால் அவா்கள் வீட்டிலிருந்தே வாக்கு அளிக்க வழிவகை செய்வோம். இல்லையென்றால் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குப் பதிவு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தால் தோ்தல் துறை வாகனம் ஏற்பாடு செய்யும் என்றாா் .