முகப்பு
புதுச்சேரி

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம்

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 10:33 PM
மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன்.
பகிர்:

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற வருபவா்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு தகவல்கள் அச்சிட்ட சீட்டுகள் வழங்கப்பட்டன.

அதில் 100சதவீத வாக்குப் பதிவு மற்றும் கண்ணியமான வாக்குப்பதிவு பற்றிய கருத்துகள் அடங்கியுள்ளன. நோயாளிக்கு வழங்கப்படும் இந்த மருத்துவச் சீட்டினை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டாா்.

இக் கல்லூரி இயக்குநா் மருத்துவா் உதயசங்கா், துணை மாவட்ட தோ்தல் அதிகாரி கண்ணபிரான் ஆகியோா் உடனிருந்தனா்.