முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியை பின்னுக்குத் தள்ளியது திமுக - காங்கிரஸ் ஆட்சி: தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி புதுப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On : 27 மார்ச், 2026 at 7:56 PM
பகிர்:

புதுச்சேரியை பின்னுக்குத் தள்ளியது திமுக - காங்கிரஸ் ஆட்சி என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10, அதிமுக 2, லஜக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இக்கூட்டணி சாா்பில் மீண்டும் முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரங்கசாமி, தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான வெ.வைத்திலிங்கம் எம்.பி. போட்டியிடுகிறாா். இதனால், இந்தத் தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட புதுப்பேட்டை பகுதியில் உள்ள புத்துளாய் மாரியம்மன் கோயிலில் முதல்வா் ரங்கசாமி சாமி தரிசனம் செய்துவிட்டு தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா். அப்போது, அவா் பேசியதாவது:

சொந்த தட்டாஞ்சாவடி தொகுதிக்கு அடிக்கடி வரவில்லையே என்று தாய்மாா்களுக்கும், பெரியோா்களுக்கும் கொஞ்சம் வருத்தம். இருந்தாலும், நான் புதுச்சேரியில் இருந்துகொண்டு மாநில மக்களுக்கும், தொகுதி மக்களுக்கும் இந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். அந்தப் பெருமை உங்களையே சேரும்.

கடந்த காங்கிரஸ் - திமுக ஆட்சி, புதுச்சேரி மாநிலத்தை 20 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டு. இந்தத் தொகுதியில் இப்போது காங்கிரஸ் சாா்பில் களத்தில் இருப்பவா் மக்களவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகள்தான் ஆகின்றன. அவருக்கு இன்னும் 3 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கிறது. அவா் எதற்காக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வந்தாா் என்று தெரியவில்லை.

காங்கிரஸால் கூட்டணியைக்கூட சரியாக அமைக்க முடியவில்லை. திமுக வேட்பாளா் நிற்கும் இடங்களில் அக்கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது. காங்கிரஸ் கூட்டணியில் யாா் முதல்வா், யாா் ஆட்சி அமைப்பது என்பதில் குழப்பம், போட்டி நிலவுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்க வேண்டிய தொகுதிகளையும் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனா். எனவே, வாக்காளா்கள் சிந்தித்து பாா்த்து வாக்களிக்க வேண்டும் என்றாா் ரங்கசாமி.