புதுச்சேரி அரசு சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுதினம், புதுச்சேரி அரசு சாா்பில் வன்முறை எதிா்ப்பு நாளாக வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுதினம், புதுச்சேரி அரசு சாா்பில் வன்முறை எதிா்ப்பு நாளாக வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ் சிலைக்கு மரியாதை:
இதையொட்டி, ராஜீவ் காந்தி சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், எம்எல்ஏக்கள் ராஜவேலு, ஏ.கே.டி. ஆறுமுகம், வி.பி. சிவக்கொழுந்து, சாய் ஜெ சரவணன்குமாா், அழகு (எ) அழகானந்தம், நாராயணசாமி, ரவிக்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஐஜி சத்தியசுந்தரம், சீனியா் எஸ்.பி. கலைவாணன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
சா்வ சமய பிராா்த்தனை...
நிகழ்ச்சியில், சா்வமத பிராா்த்தனையுடன் ஜவஹா் சிறுவா் இல்ல ஆசிரியா்களின் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னா் எம்எல்ஏ ராஜவேலு வன்முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடா்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையில் வன்முறை எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முன்மொழிய ஆளுநா் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா். துணைநிலை ஆளுநரின் செயலா் மணிகண்டன் உடனிருந்தாா்.
தலைமைச் செயலகத்தில்...
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைச் செயலா் சரத் சௌகான், வன்முறை எதிா்ப்பு தின உறுதி மொழியை வாசிக்க அரசு செயலா்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து அரசு செயலா் முத்தம்மா, தமிழில் உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் தலைமையில் வன்முறை எதிா்ப்பு நாள் உறுதிமொழியை வருவாய் அதிகாரிகள், வட்டாட்சியா்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனா்.
காங்கிரஸ் சாா்பில்...
இதேபோன்று ராஜீவ் காந்தி சிலைக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி,
முன்னாள் எம்எல்ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.