விழுப்புரம்

மழை வேண்டி வருண ஜபம்

DIN

விழுப்புரத்தில் மழைவேண்டி ஆஞ்சநேயர் கோயில் குளத்தில் வருண ஜபம் மற்றும் வேள்வி சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் சங்கரமடம், ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகம் சார்பில், உளுந்தூர்பேட்டை ராஜகோபால் சாஸ்திரிகள் தலைமையில் வேதவிற்பன்னர்கள் 5 பேர் குளத்தில் இறங்கி மழை வேண்டி வருண ஜபம் நடத்தினர். தொடர்ந்து, வருண யாகத்தையும் அவர்கள் மேற்கொண்டனர்.
இந்த வருண ஜபம் காலை 7 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது.
பிராமணர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரன், அனந்தராமன், ராஜாராம், நடராஜன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT