விழுப்புரம் அருகே உள்ள ஒரத்தூர் சுவாமி விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தாளாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அ.முத்துவேலன் வரவேற்றார். துணை முதல்வர் கெஜலட்சுமி, கல்லூரிச் செயலர் பரந்தாமன், கணினி துறைத் தலைவர் சுரேஷ்ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் ராமகிருஷ்ணா கல்விக் குழும செயலாளர் பழனிவேல் வாழ்த்துரை வழங்கினார். செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம சுவாமி தேவஅர்ச்சனானந்த மகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.
விழாவில் முதலாமாண்டு இளநிலை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.