விழுப்புரம்

மே 28-இல் சிங்கவரம் அரங்கநாதர் கோயில் தேரோட்டம்

தினமணி

வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கவரம் அரங்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா வருகிற 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெறுகிறது. தேர்த் திருவிழா வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
 விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ் தலைமை வகித்தார். கோயில் மேலாளர் மணி முன்னிலை வகித்தார்.
 கூட்டத்தில் பொதுப்பணித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்வாரியத் துறை, வருவாய்த் துறை, ஊராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.
 தேரோட்டத்துக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மற்றும் பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
 இதனைத் தொடர்ந்து சிங்கவரத்தில் தேர் செல்லும் வீதிகளை ஆய்வு செய்தனர். கோயில் நிர்வாகிகள் ரங்கநாதன், குணசேகர், இளங்கீர்த்தி, ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT