விழுப்புரம்

வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு

தினமணி

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
 கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜெயந்த்படேல், அண்மையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருந்த அவர், வரும் 10-ஆம் தேதி முதல் தலைமை நீதிபதியாக பதிவி உயர்வு பெற வேண்டிய நிலையில், இடமாற்றம் செய்து 3-ஆவது நீதிபதியாக அங்கு நியமிக்கப்பட்டுள்ளார். உள்நோக்கத்துடன் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
 மேலும், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய நீதிமன்ற வழக்குரைஞர்களும் இதே கருத்தை வலியுறுத்தி நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT