முகப்பு
விழுப்புரம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய காலாண்டுக்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
 பத்தாம் வகுப்பு (தோல்வி, தேர்ச்சி) மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளைப் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2017 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறன் இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
 இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2017 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
 இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி ரூ.400 மற்றும் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு ரூ.600 என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
 உதவித் தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாகக் காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.
 இந்த காலாண்டுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை நவம்பர் 30-ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
 

முழு கட்டுரையைப் படிக்க →