முகப்பு
விழுப்புரம்

தி.வேல்முருகன் ஜாமீன் மனு இன்று விசாரணை

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 
செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 5) ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், கடந்த ஏப்ரல் 1-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது, சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகனை மே 26 ஆம் தேதி போலீஸார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 
இந்த வழக்கில் ஜாமீன் கோரி கடந்த மே 28-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் மூலமாக தி.வேல்முருகன் மனு தாக்கல் செய்தார். 
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சரோஜினிதேவி, வழக்கு விசாரணையை 
செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →