மயிலம் முருகன் கோயிலில் தேர்த் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 30) வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 30) வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி, சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ஊர்களில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் வரும் வெள்ளிக்கிழமை(மார்ச் 30) வரை இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.