விழுப்புரம்

மது விலக்கு சோதனை: 117 பேர் கைது

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மது விலக்கு தீவிர சோதனையில் 118 வழக்குகளின் கீழ் 117 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மது கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், சாராயம் விற்பனை போன்றவற்றைத் தடுக்க போலீஸார் அண்மையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், 2,400 லிட்டர் சாராய ஊறல்கள், 900 லிட்டர் எரிசாராயம், 290 லிட்டர் சாராயம், 1,000 புதுச்சேரி மதுப் புட்டிகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை 
பறிமுதல் செய்யப்பட்டன.   இது தொடர்பாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22 பெண்கள் உள்பட 117 பேரை போலீஸார் கைது செய்தனர். 
போதைப் பாக்கு விற்பனை, சாலையோரத்தை ஆக்கிரமித்து கடை வைத்தல் போன்றவை காரணமாக 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT