விழுப்புரம்

மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி சாவு

DIN

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். 
கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூர் காலனியைச் சேர்ந்தவர் பாப்பாள் (60). திங்கள்கிழமை மாலை அப்பகுதி சாலையோரம் நடந்து சென்ற இவர் மீது கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் மணி (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் காயமடைந்த பாப்பாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்.
விபத்து குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT