விழுப்புரம் மாவட்ட நோட்டரி பப்ளிக் வழக்குரைஞராக கே.துரைராஜ் நியமிக்கப்பட்டார்.
விழுப்புரம் அருகே உள்ள வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் கே.துரைராஜன். விழுப்புரம் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இவர், மாவட்டத்தின் நோட்டரி பப்ளிக் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். ஐந்தாண்டுகள் இப்பணியை கே.துரைராஜன் மேற்கொள்வார் என்று அரசுச் செயலர் எஸ்.எஸ்.பூவலிங்கம் தெரிவித்தார்.