விழுப்புரம்

உலக அஞ்சலக தின விழா

DIN

சங்கராபுரத்தில் வள்ளலார் மன்றம், இன்னர்வீல் கிளப் சார்பில் உலக அஞ்சலக தின விழா அண்மையில் நடைபெற்றது. 
 விழாவுக்கு மன்றத் தலைவர் ஜே.பால்ராஜ், கிளப் தலைவர் கே.சரவணதேவி ஆகியோர் தலைமை வகித்தனர். வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் வரவேற்றார். ரோட்டரி கிளப் தலைவர் அ.சுரேஷ், ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகி ஜி.வேங்கடநாராயணன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.பிரகாசம், செயலர் கோ.குசேலன், ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் அ.முகமத்ரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 விழாவில் அஞ்சல் அலுவலர் எஸ்.ரெங்கையன் அஞ்சலக சிறுசேமிப்பு, கடிதம், அஞ்சல் தலை, செல்வமகள் திட்டம், ஏ.டி.எம். அட்டை பற்றி விரிவாகப் பேசினார். சங்கராபுரம் பகுதியில் பணிபுரியும் அனைத்து அஞ்சல் பணியாளர்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் வள்ளி, அரிமா மாவட்டத் தலைவர் ஜனனி.மகாலிங்கம், அரிசி ஆலை சங்கத் தலைவர் க.வேலு, ரோட்டரி முன்னாள் தலைவர்கள் அ.மூர்த்தி, தா.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அஞ்சல் பணியாளர்  ஏ.கார்மேகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT