விழுப்புரம்

மணல் கடத்தல்: 4 பேர் கைது

DIN

வானூர் அருகே லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக விழுப்புரம் மணல் கடத்தல் தடுப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மணல் கடத்தல் தடுப்பு டி.எஸ்.பி. வீமராஜ் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை இரவு அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
அப்போது, வானூர் அருகே ஆகாசாம்பட்டு என்ற இடத்தில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விக்கிரவாண்டி அருகே முட்ராம்பட்டைச் சேர்ந்த செந்தில்முருகன்(34), வழுதாவூரை சேர்ந்த சுரேஷ்(30), பக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்த வசந்தராஜா(30), பிரகாஷ்(33) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  தப்பிச்சென்ற மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT