விழுப்புரம்

மின்னல் பாய்ந்து மூதாட்டி சாவு

DIN

சங்கராபுரம் அருகே மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
சங்கராபுரத்தை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி மனைவி நீலாவதி(65). இவர், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். மாலை 4.10 மணியளவில் அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது, எதிர்பாராமல் மின்னல் பாய்ந்ததில் இவர், நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். சடலத்தை சங்கராபுரம் காவல்துறையினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT