விழுப்புரம்

சிறையில் கைதி தற்கொலை முயற்சி

DIN

கடலூர் மத்திய சிறையில் ஆணியை விழுங்கி கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் முகமது இர்பான் (25). இவர், கடந்த ஆண்டில் திருட்டு வழக்கில் கள்ளக்குறிச்சி போலீஸாரால்  கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஆணியை விழுங்கிய நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறை அலுவலர் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT