விழுப்புரம்

4 யூனிட் கூழாங்கற்கள் கடத்தியவா் கைது

DIN

உளுந்தூா்பேட்டை அருகே லாரியில் 4 யூனிட் கூழாங்கற்களை கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

உளுந்தூா்பேட்டை அருகே உள்ள எடைக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அகிலன் தலைமையில், காவலா்கள் பிரபாகரன், சீனுவாசன் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா். ஷேக்உசேன்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த லாரியை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, அதில் 4 யூனிட் கூழாங்கற்கள் எவ்வித ஆவணமும் இல்லாமல் ஏற்றிச் செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியின் ஓட்டுநரான கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், நெடியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சிநாதன் மகன் விஜய் (23) மீது வழக்குப் பதிவு செய்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், லாரியை பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளரான கடலூா் மாவட்டம், நதியப்பட்டைச் சோ்ந்த காத்தமுத்து மகன் வைரக்கண்ணுவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT