கார் ஓட்டுநரை தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலைப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் துரை (45). அதே பகுதியில் உள்ள ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் சந்தோஷ் (35). இருவரும் கார் ஓட்டுநர்கள். இவர்கள்
இருவருக்கும் தொழில் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.
அப்போது சந்தோஷ் மதுப் புட்டியால் துரையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த துரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.