திருக்கோவிலூர் அருகே சு.கொல்லூரில் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.மகேஷ் தலைமை வகித்து, சைக்கிள் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சிங்கார.உதியன், நல் நூலகர் மு.அன்பழகன் ஆகியோர் திருக்குறள் ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் விதமாக மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.