விழுப்புரம்

தலையில் கல் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN

கள்ளக்குறிச்சியில் ஹாலோபிளாக் கல் தலையில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
 கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், புடையூரைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் ராஜிவ்காந்தி (30), கூலித் தொழிலாளி.
 இவர் கடந்த சுமார் 3 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள ஹாலோபிளாக் கல் அறுக்கும் பணியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
 ஞாயிற்றுக்கிழமை மதியம் உணவு இடைவேளையின்போது, படுத்து தூங்கிக் கொண்டிருந்த இவரின் தலை மீது ஹாலோபிளாக்கல்கள் விழுந்தன. இதில் ராஜிவ்காந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT