செஞ்சி ஒன்றிய அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கான நன்றி அறிவிப்பு கூட்டம், பொன்பத்தி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
செஞ்சி ஒன்றிய அதிமுக செயலர்
அ.கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் நடராஜன், காமாட்சி கணேசன், ரங்ககநாதன், தேவகி ராஜாராமன், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்பத்தி கிளைச் செயலர் துரை வரவேற்றார்.
கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி காளிதாஸ், முன்னாள் எம்.பி.,செஞ்சி ஏழுமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி சேகர், மாவட்ட மருத்துவர் அணிச் செயலர் ராமச்சந்திரன்,
அனந்தபுரம் நகரச் செயலர் அரிராமன், மாவட்ட மகளிர் அணித் தலைவி மல்லிகா குமார், ஒன்றிய
எம்ஜிஆர் மன்றச் செயலர் தேவராஜ், பேரவைச் செயலர் பூங்குன்றம், மாணவர் அணி செயலர் துரை லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.