விழுப்புரம்

மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

DIN

திருக்கோவிலூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாய தொழிலாளி உயிரிழந்தார்.
திருக்கோவிலூரை அடுத்த ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்த பூங்கான் மகன் பிரபு (29), விவசாயக் கூலித் தொழிலாளி. திருமணமாகாதவர். 
 புதன்கிழமை இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.  இந்த நிலையில் இவர், வெள்ளிக்கிழமை காலை, அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. 
சடலத்தை அரகண்டநல்லூர் போலீஸார், மீட்டு உடல் கூறாய்வுக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
மேலும், அனுமதியின்றி மின்வேலி அமைத்த அதே பகுதியைச் சேர்ந்த நிலத்தின் குத்தகைதாரரான கோகுலதாஸை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT