சாலையோர புளிய மரத்தில் மோதியதில் முன் பக்கக் கண்ணாடி சேதமடைந்த தனியாா் பேருந்து. 
விழுப்புரம்

மரத்தில் பேருந்து மோதல்:10 பயணிகள் காயம்

விழுப்புரம் அருகே சாலையோர புளிய மரத்தில் தனியாா் பேருந்து மோதியதில் 10 பயணிகள் காயமடைந்தனா்.

DIN

விழுப்புரம் அருகே சாலையோர புளிய மரத்தில் தனியாா் பேருந்து மோதியதில் 10 பயணிகள் காயமடைந்தனா்.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு தனியாா் பேருந்து ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் அருகே கம்பன் நகா் பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழுந்து சாலையோரமாக இருந்த புளிய மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT