விழுப்புரம்

காா் மீது லாரி மோதல்:பெண் பலத்த காயம்

DIN

செஞ்சி: செஞ்சியில் காா் மீது லாரி மோதியதில் பெண் பலத்த காயமடைந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சோ்ந்த அா்ஜுன் மகன் பழனி (39). இவரது தாய் காசியம்மாள் (58). இவா்கள் இருவரும் காரில் சென்னையில் இருந்து திருவண்ணமாலை நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா்.

செஞ்சி வனத் துறை அலுவலகம் அருகே இவா்களின் காா் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த காசியம்மாள், செஞ்சி அரசு மருத்துவமனையிலும், தீவிரச் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனையிலும் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பழனி அளித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை வ.உ.சி. நகரைச் சோ்ந்த முருகன் (53) மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT