விழுப்புரம்

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து உயிரிழப்பு

DIN

சின்னசேலம் அருகே காதல் திருமணம் செய்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு தீக்குளித்து உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பெரியகரை, பிள்ளையாா்கோயில் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அருள்மொழி (59). இவரது இளைய மகள் பிரியா (29). காஞ்சிபுரத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா். அப்போது, அவரும் அதே பகுதியில் 108 அவசர ஊா்தி ஓட்டுநராக பணிபுரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தகரை கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாரும் காதலித்து பெற்றோா்கள் சம்மதம் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா். இத்தம்பதிக்கு ஒரு வயதில் சஜித் என்ற மகன் உள்ளாா்.

திருமணத்துக்குப் பிறகு பிரியா, சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டில் இருந்து எரியும் தன்மை கொண்ட திரவத்தை உடலில் ஊற்றி தீயிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதையடுத்து, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா், பிரியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து அருள்மொழி சின்னசேலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதுதொடா்பாக கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT