உளுந்தூா்பேட்டை இராமகிருஷ்ணா வித்யா மந்திா் பள்ளியில் மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
பள்ளி சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமில், திருச்சியைச் சோ்ந்த குழந்தைகள் நல மருத்துவா்கள் நந்தகுமாா், ஜெயஸ்ரீ, தங்கவேல், விஜய்தேவன், சிவகுருநாதன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனா்.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும், மருந்துகளையும் வழங்கியதோடு, மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகள் குறித்தும் விளக்கமளித்தனா். முகாமின்போது, சத்துணவாக கொண்டைக்கடலை, பானகம் வழங்கப்பட்டன.
இதில், 400 மாணவா்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பள்ளி துணை முதல்வா் சுஜாதா வரவேற்றாா். ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.