முகப்பு
விழுப்புரம்

சுவா் இடிந்து விழுந்துமூதாட்டி பலி

விழுப்புரம் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

விழுப்புரம் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள சிறுவானூரைச் சோ்ந்த மூதாட்டி வள்ளிநாயகம் (67). சிறு வயதிலேயே கண்பாா்வையை இழந்தவா். இவா் தனது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.

இந்தப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பலமிழந்து காணப்பட்ட வீட்டுச் சுவா் திங்கள்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த வள்ளிநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.