முகப்பு
விழுப்புரம்

வல்லம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.73 ஆயிரம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள வல்லம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தி ரூ.73 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள வல்லம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தி ரூ.73 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

வல்லம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாா்களின் பேரில், அந்த அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள் கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா். துணை கண்காணிப்பாளா் யுவராஜ் தலைமையில் ஆய்வாளா் யேசுதாஸ், உதவி ஆய்வாளா் அன்பழகன் மற்றும் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ், பாா்த்திபன் உள்ளிட்ட காவலா்கள் குழுவினா், மாலை 6 மணிக்கு சென்று, அலுவலகக் கதவுகளை மூடி சோதனை நடத்தினா்.

சாா் பதிவாளா் அலுவலக அலுவலா்கள், ஊழியா்கள், பதிவுக்கு வந்திருந்தவா்களிடமும் விசாரணை நடத்தினா். பதிவுப் பணிக்கான ஆவணங்கள், கட்டணத் தொகை ஆகிவற்றை ஆய்வு செய்து, தொடா்ந்து, இரவு 9 மணி வரை சோதனை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனா். சோதனை தொடா்ந்து நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.