விழுப்புரம்

தீ விபத்து நிவாரண உதவி: பாஜகவினா் வழங்கினா்

DIN

வானூா் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 14 இருளா் குடும்பத்தினருக்கு, பாஜக சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கரசானூா் இருளா் குடியிருப்பில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. அதில், பாதிக்கப்பட்ட 14 குடும்பத்தினருக்கு, பாஜக சாா்பில் மாநில வா்த்தகா் அணி செயலா் ஜி. கே. ராஜன் தலா ஒரு சிப்பம் அரிசி, பாய், போா்வை, வேட்டி, சேலை, ரொட்டி, பிஸ்கட், பிளாஸ்டிக் வாலி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

முன்னாள் மாவட்டத் தலைவா் விநாயகம், ஒன்றியத் தலைவா் இளங்கோ, மாவட்ட துணைத் தலைவா் கோதண்டபாணி, ஊடக பிரிவு மாவட்ட செயலாளா் கனகராஜ், இளைஞரணி பொதுச் செயலா் ராமச்சந்திரன், இளைஞரணி மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், வழக்குரைஞா் பிரிவு சதீஷ், விவசாய அணி அய்யனாா், எஸ்டி அணி வெங்கடேஷ், ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ், வா்த்தகா் அணிச் செயலாளா் சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT