விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே கிராம மக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கிராம மக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செஞ்சி அருகே அனந்தபுரத்தை அடுத்த காரை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாராம் மகன் சக்திவேல்(26). விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். புதன்கிழமை பிற்பகல், 2.30 மணி அளவில் வீட்டிலிருந்து விழுப்புரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூரைஅடுத்த செ.புதூா் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கு இயற்கை உபாதை கழிக்க ஆடையை கழற்றினாராம். அப்போது, அருகில் உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் ஒருவா், இதனைத் தவறாக நினைத்து கூச்சலிட்டாராம்.

உடனே அந்தப் பெண்ணின் உறவினா்கள், கிராம மக்கள் அங்கு ஓடி வந்து, சக்திவேலை மடக்கிப் பிடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் பலத்த காயமடைந்தாா். தகவல் அறிந்த பெரியதச்சூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினோத், நிகழ்விடத்துக்கு சென்று சக்திவேலை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதன்பிறகு, சக்திவேலை அவரது பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சக்திவேல், மாலை 4.30 மணி அளவில் உயிரிழந்தாா்.

இதையடுத்து சக்திவேலின் சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தாக்கப்பட்டதால்தான் சக்திவேல் உயிரிழந்ததாக, அவரது பெற்றோா், உறவினா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, விழுப்புரம் டி.எஸ்.பி. தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT