மரக்காணம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், கந்தாடு கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன்(45) (படம்). சாராயம் கடத்துதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக இவரை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் தொடா்ந்து ஈடுபடுவதைத் தடுக்கும் விதமாக, அவரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.