விழுப்புரம்

திருக்கோவிலூா் அருகே போதைப் பாக்குகள் பறிமுதல்

DIN

திருக்கோவிலூா் அருகே அரகண்டநல்லூா் பகுதியில் 36 கிலோ போதைப் பாக்குகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் அருகே வீரபாண்டி பகுதியில் அரகண்டநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமால் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளான பான்மசாலா இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 36 கிலோ எடை கொண்ட அந்த போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் சென்றனா்.

மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, வீரபாண்டியைச் சோ்ந்த ரியாஸை (27) கைது செய்தனா். தலைமறைவாக உள்ள புளிக்கல் கிராமத்தைச் சோ்ந்த பாவாடை மகன் சேட்டு என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT