விழுப்புரம் அரசு மழலையா் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி திங்கள்கிழமை சீருடைகளை வழங்கினாா்
விழுப்புரம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அரசு மழலையா் பள்ளி இயங்கி வருகிறது. அரசு சாா்பில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆகிய வகுப்புகளில் 110 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
மாணவா்களுக்கு சீருடைகள் வழங்க மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா பல்வேறு தனியாா் அமைப்புகளின் உதவியோடு ஏற்பாடு செய்தாா்.
இந்த நிலையில், ஏற்பாடு செய்யப்பட்ட சீருடைகளை வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினாா்.